அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி இவர் தற்பொழுது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார் இந்நிலையில் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் ரேணுகாதேவி கடந்த 18ஆம் தேதி மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கு சொந்தமான சர்வே எண் 433/11 சார்ந்த நிலத்தில் 50 ஆண்டுகளாக உரிமையுடன் வைத்திருக்கிறோம். இதில் நிலத்திற்கு உரிய பட்டா எண் 8538 எங்களது பெயரில் நீண்ட காலமாக உள்ளது இந்த நிலம் சம்பந்தமாக தற்போது நீதிமன்ற வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தங்களுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் சட்டப்படி நோட்டீஸும் வழங்காமல் சில நபர்களின் பெயர்களை பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிந்து கொண்டோம் பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ள பெயர்களை நீக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். அப்போது நான் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தாசில்தாரிடம் வாக்குவாதம் செய்து தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் ரேணுகா தேவியின் செல்போனை பிடுங்கி உடைத்து எறிந்ததாக கூறப்படுகிறது. இதில் 40 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது இது குறித்து ரேணுகாதேவி புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப் பட்டா பிரிப்பது எப்படி.. ஆவணங்கள் அவசியம்! பட்டாவில் பெயர் மாற்றலாம் :: https://tamil.oneindia.com/news/chennai/joint-patta-importance-and-how-to-divide-individual-patta-from-a-joint-patta-can-we-change-the-na-724059.html?ref=DMDesc
இலவச வீட்டு மனை பட்டா இனி யாருக்கு கிடைக்கும்.. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன :: https://tamil.oneindia.com/news/madurai/who-will-get-free-housing-land-patta-now-what-is-the-verdict-of-the-high-court-722183.html?ref=DMDesc
பட்டா பெயர் மாற்ற விண்ணப்பம்..இ டிஸ்ட்ரிக்ஸ் சர்வர் என்னாச்சு? நிலம் வாங்குவோருக்கு பதிவுத்துறை ஹோப் :: https://tamil.oneindia.com/news/chennai/land-owners-happy-news-for-patta-name-change-documents-soon-and-tamil-nadu-registration-department-s-722087.html?ref=DMDesc