Skip to playerSkip to main content
கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என புகழ் பெற்ற தமிழரசர் இராசேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையை, 2021ஆம் ஆண்டு, நமது #DravidianModel அரசு ஆண்டு விழாவாக அறிவித்தது.

அவரது தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில், சோழப் பேரரசின் வரலாறும், கடல் கடந்த வணிகத் தொடர்புகளும் கூறும் அருங்காட்சியகம் உருவாகி வருகிறது. அதன் அடிக்கல் கடந்த ஜனவரியில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் நாட்டினார்.

இப்போது, அவரது பிறந்த நாளையொட்டி, அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில், நீர்வள மேம்பாடு மற்றும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

#RajendraChola #GangaiKondaCholapuram

Category

🗞
News
Comments

Recommended