Please Visit and Subscribe to our YouTube Channel through the link below https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
பாசாங்குசத்தால் பகைவரை வீசி பாவம் போக்கிடுவாய்! பசித்து வந்தோர்க்கு பாலை ஊட்டி தாகம் தீர்த்திடுவாய்! நேசம் வைத்தே அம்மா என்றால் நிம்மதி சேர்த்திடுவாய்! உன் நீல விழியாள், ஏழைவாழ ஒரு கனம்பார்த்திடுவாய்! அம்மா! அம்மா! அம்மா!
உன்னைத் தான் தேடி ஓடோடி வந்தேனே! உயிருக்குயிராய் இனிக்கும் உண்மையைக் கண்டேனே!
கண்ணை இமைக்காமல் கண்டு கொண்டிருந்தேனே! காணக்காண நான் என்னையே மறந்தேனே!
அன்னை எனும் சொல்லில் அமுதப்பிரவாகமோ! அன்பில் நாதமோ! ஆனந்த கீதமோ!
தென் மதுரை தேவி தில்லை மாகாளி, ஸ்ரீ சக்ரம் வீற்றிருக்கும் ராஜராஜேஸ்வரி!
சின்னப் பெண் போல் எதிரில் சிரித்து நடைநடந்தாய்! திருமுகத்தில் மஞ்சள் விளங்க நகைப்புரிந்தாய்! கன்னல் ஒன்றை வளைத்து கையிலே வைத்திருந்தாய்! மின்னற்கொடியாக மெய்யிலே உட்புகுந்தேன்!