Skip to playerSkip to main content
  • 4 years ago
நீண்ட பேச்சுவார்த்தை, இழுபறிக்குப் பிறகு அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் விரிசல் விழுந்திருக்கிறது. உள்ளாட்சிக் கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடும்” என்று அறிவித்திருக் கிறார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. இந்த அறிவிப்பு அ.தி.மு.க முகாமுக்குள் மலர்ச்சியை உருவாக்கியிருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்குப் பண பலமில்லை என்பதால், தவித்துப்போயிருக்கிறார்கள் அ.தி.மு.க-வின் கீழ்மட்ட நிர்வாகிகள். மற்றொருபுறம், கூட்டணிக் கட்சிகளை தி.மு.க நடத்தும்விதம் கடும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. “இதுதாங்க கொடுக்க முடியும். வேணும்னா ஏத்துக்கிட்டு போட்டியிடுங்க. இல்லைன்னா கெளம்புங்க” என்று தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் ‘கட் அண்ட் ரைட்’டாகப் பேசுவதால், அறிவாலயக் கூட்டணியிலிருப் பவர்கள் நொந்து போயிருக்கிறார்கள். பதவிக்காக நடைபெறும் இந்த யுத்தத்தில், பணம் புகுந்து விளையாடுவதால் பஞ்சாயத்து களைகட்டுகிறது. அரசியல் ரணகளத்தை ஏற்படுத்தியிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து விசாரணையில் இறங்கினோம். கிடைத்த தகவலெல்லாம் `தெறி’ ரகம்!

Category

🗞
News
Comments

Recommended