Skip to playerSkip to main content
  • 4 years ago
“நீட் எனும் கொடுவாளால் சமூகநீதியை வெட்டிச் சாய்க்க வெறிகொண்டு துடிக்கின்றனர். கொடுவாளை ஏந்தியுள்ள யதேச்சதிகாரக் கரங்களை சட்டரீதியாக ஒடுக்க, அகிம்சைப் போரைத் தொடங்கியுள்ளோம்..!” - நீட் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினிடமிருந்து சமீபத்தில் வந்த வார்த்தைகள்தான் இவை. நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பியதால், கொந்தளிப்பின் உச்சத்திலிருக்கிறது தமிழக அரசு. இந்த மோதல் குறித்து, ஜனவரி 26-ம் தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘பவன் பாலிடிக்ஸ்; சூடாகும் தி.மு.க’ என்கிற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். நாம் கூறியிருந்தபடியே, ராஜ்பவனுக்கும் தலைமைச் செயலகத்துக்கும் இடையேயான மோதல் முற்றியிருக்கிறது. ஆளுநரிடம் சிக்கியிருக்கும் ஐந்து அமைச்சர்களின் ஃபைல்கள், உளவு பார்க்கும் அதிகாரிகள், டெல்லி விசிட் ரத்து பின்னணி என அடுத்தடுத்த நகர்வுகளால் தமிழக அரசியலில் வெப்பம் கூடுகிறது!

Category

🗞
News
Comments

Recommended