Skip to playerSkip to main content
  • 4 years ago
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.

கொரோனா பரவல் தமிழகத்தில் தற்போது அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் அருப்புக்கோட்டை சின்ன புளியம்பட்டியில் பாஜக சார்பில்
நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கரும்புகளின் நடுவில் பொங்கல் பானை வைத்து பெண்கள் அனைவரும் வரிசையாக அமர்ந்து பொங்கலிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
மேலும் சிறப்பாக பொங்கல் வைத்தவர்களுக்கும், கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய அணி பிரிவு பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Category

People
Comments

Recommended