தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடங்கியுள்ளது: அண்ணாமலை பேட்டி

  • 2 years ago
தமிழகத்தில் திமுக ஆட்சியில் கடந்த 4 மாதங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடங்கியுள்ளதாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பொதுமக்களுடன் இணைந்து சென்னையில் கேட்டு ரசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
நாட்டு நடப்பை மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் பிரதமர் மோடியின் மன் கி பாத் பேச்சின் சிறப்பம்சங்களை
செய்தியாளர்கள் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 2024ல் மோடியின் அலைதான் வீசப்போவதன் தாக்கம் இப்போதே தெரிகிறது. மூன்றாவது முறையாக 400 எம்.பி சீட்டுகளுடன் இன்னொருமுறை மோடி பதவியில் அமர்வார். பல கட்சிகள் திமுகவுடன் போகலாமா? மம்தா பக்கம் போகலாமா என யோசிக்கின்றனர். உத்தரப் பிரதேச தேர்தலுக்குப் பிறகு அந்தப் பேச்சுக்கு இடமே இருக்காது. தமிழகத்தில் பாஜக இருக்கும் அணி அதிக எம்.பிக்களைப்பெற்று அமைச்சராக அமர்வார்கள்.
தமிழகத்தில் குறுகிய காலத்தில் கடந்த 4 மாதங்களாக நிறைய குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இவை எதையும் நாம் ஆதாரம் இல்லாமல் வெறும் குற்றச்சாட்டாக வைக்கவில்லை. எத்தனை கொலைகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எத்தகை கொலைகள் எத்தனை பள்ளிகள் சிறுமிகள் தற்கொலை, எத்தனைப்பள்ளிகளில் போக்சோ கேஸ், 10 மாத குழந்தை கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு குற்றவாளி யாரென்று தெரியவில்லை. கோவையில் 15 வயது சிறுமி கைகால்கள்கட்டப்பட்ட நிலையில் ஒரு மூட்டையில் சிறுமியின்உடல் கிடைத்துள்ளது. குற்றவாளி யார் என்று தெரியாது. தனியாக தலையை வெட்டி அதை பூஜைசெய்கிறார்கள்.
அதையெல்லாம் முதன்முதலாக தமிழகத்தில் மக்கள் பார்க்கிறார்கள். தமிழகக் காவல்துறைக்கு ஒரு கம்பீரம் உள்ளது. தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது என்பதை நிராகரிக்க முடியாது. ஆனால் இந்த குறுகிய 4 மாத காலத்தில் காவல்துறையில் மாநில அரசின் தலையீடு உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் திமுக மாவட்டச் செயலாளர்களின் இடையூறு காரணமாக சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆரம்பித்துள்ளது. இதனால் கம்பீரமான காவல்துறை தனது நிலையை இழந்து வருகிறது.
இந்த நிலைமையை கட்டுப்படுத்தவில்லையெனில் இதன் விபரீதத்தை அடுத்த வருடத்திலிருந்து நாம் பார்க்க ஆரம்பிப்போம். மீண்டும் தமிழக காவல்துறை தனது கம்பீரத்தை திரும்பப் பெற வேண்டும். ஆளுங்கட்சியாக உள்ள திமுக அரசு தமிழகக் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும்.

இந்தித் திணிப்பதை நீங்கள் மட்டுமல்ல பாஜகவும் எதிர்க்கத்தான் போகிறது. ஒரு மொழியை எங்குமே திணிக்கக் கூடாது என்பதுதான் கட்சியின் நிலைப்பாடு. ஆனால் புதிய கல்விக் கொள்கையில் மாணவர்களின் விருப்பத்திற்கு இடம் அளிக்கிறது. தமிழைக் கண்டிப்பாக படிக்கிறது. ஆங்கிலம் கண்டிப்பாக படிக்க வேண்டும். மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். இப்படி சொன்னால் உடனே என்ன சொல்வார்கள் பாஜக பின்கதவு வழியாக உள்ளே வருகிறது என்று.
இதுபோல ஆதாரமின்றி சொல்பவர்களுக்கு நாம் என்ன சொல்லமுடியும் மொத்த பதிவு விகிதத்தில் தமிழகம் முதல் இடம் பிடித்தது நெம்பர் ஒன்றாக இந்தியாவில் இருப்பதாக பெருமை பேசுகிறோம். ஆனால் 100 சதவீதத்தை எட்டியுள்ளோமா? ஒரு ஐரோப்பா நாட்டுக்கு இணையாக வந்துவிட்டோமா கிடையாது. புதிய கல்வி கொள்கை அதையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது. இன்னொரு பக்கம் பள்ளியில் மாணவர்களுக்கு சுமை உள்ளது. புதிய கல்வி கொள்கையில் அவ்வளவு சுமைகளையும் உடைத்து 5 பாடத்திட்டங்களாக 12ஆம் வகுப்பு வரை பிரிக்கிறோம் என்றார்.

Recommended