உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ளதாகக் கூறி செங்கல்பட்டு சுற்றுப்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யார் இந்த ஆதிபராசக்தி அம்மா என தேடியதில் இணையத்தில் ஒரு பேஸ்புக் பக்கம் சிக்கியது. ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் எனக் கூறிக் கொண்டு பக்தி பரவசத்தில் பொதுமக்கள் செய்யும் பூஜை வீடியோக்கள் ஏராளமான பதிவு செய்யப்பட்டுள்ளது.
Be the first to comment