Skip to playerSkip to main content
  • 4 years ago
ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும். மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் சூளை நோயால் அவதியுற்ற போது. இக்கோவிலின் வைத்தியநாதரை வழிபட்டு சூளைநோய் நீங்கப்பெற்றார். இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை அன்று "ஆருத்ரா தரிசனம்" சிறப்பாக நடைபெறும்.அது போல் இந்த ஆண்டு இன்று திருவாதிரையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து சந்தனகாப்பு சாத்தப்பட்டு ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து உற்சவர் நடராஜரை மாணிக்கவாசகர் எதிர்கொண்டு திருவெம்பாவை பாடல் பாடும் வைபவமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Category

People
Comments

Recommended