15 வருடம் 1,200 பேருக்கு படிப்பு ! இப்படியும் மனிதர்கள் !

  • 4 years ago
கோவை, சூலுரைச் சேர்ந்தவர் லோகநாதன். சிறிய லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். வயிற்றுப்பாட்டுக்காக லேத் பட்டறை. இந்த பணி போக லோகநாதன் நாமெல்லாம் கண்டாலே முகம் சுளிக்கின்ற பணியும் செய்வார். அது வீடு வீடாக சென்று கழிவறைகளை சுத்தம் செய்வது. லேத் பட்டறை வைத்துதான் நடத்துகிறாரே... பின்னர் எதற்கு கழிவறை சுத்தம் செய்து சம்பாதிக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா?. கழிவறை கழுவி சம்பாதிக்கும் பணத்தில் லோகநாதன் படிக்க வைத்த மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை மட்டும் 15 வருடங்களில் 1,200 பேர். இவர்களின் படிப்புக்காகத்தான் லோகாதன் 'பார்ட் டைம் ஜாப்' போல வீடு வீடாக சென்று கழிவறை கழுவி வருகிறார். ஒரு வீட்டுக்கு மாதம் 400 ரூபாய் வசூலிக்கிறார். அந்த தொகையை கொண்டு ஏழை மாணவர்கள், படிக்க வசதியில்லாதவர்களை பள்ளியில் சேர்க்க வைத்து படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

Recommended