பத்மாசனத்தில் கூடுதல் விரிவாக்க ஆசனம். இவ்வாசனத்தில் மார்பு எலும்புகள் இடவலமாக விரிவடைகின்றன. அதனால், நுரையீரல்களின் அகலம் அதிகரித்து, நிறைய காற்றை உள் இழுக்க முடிகிறது. தாமரைப் பூவின் இதழ்கள் விரிவதைப்போல, நம் மார்பு எலும்புகள் விரிவடைவதால் இதற்கு பத்ம பத்மாசனம் என்று பெயர்.