Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
ஸ்ரீதேவியைத் திரையில் பார்ப்பதற்கு முன்பாகவே குமுதம், ராணி ஆகிய இதழ்களின் அட்டைப் படங்களில் பார்த்திருந்தேன். அந்த அழகுக்கு மலர்களின் மலர்ச்சியை நேர்வைக்கலாம். என் தந்தையாரின் விருப்ப நாயகியும் அவரே. அவருடைய திரைப்பட விருப்பச் சாய்வுகளை இன்றைக்கும் என்னால் நன்கு நினைவுகூர முடிகிறது. அவற்றிலிருந்தே ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளின் இறுதியில் பிறந்த ஒருவரின் மனத்தை அடைகிறேன். 'முத்துக்கு முத்தாக... சொத்துக்குச் சொத்தாக...' பாடலைக் கேட்டால் தானாக அழக் கூடியவர். ஸ்ரீதேவியின் திரைப்பட ஈர்ப்பு அக்காலத்து இளைஞர்களைப் பிசாசுபோல் பிடித்தாட்டியிருக்கிறது.

Poet Magudeswaran's rich tribute to late legend Sridevi

Category

🗞
News

Recommended