எம் வாழ்கையின் நியதி இதுவே - தமிழ் ஈழம் யாழ். நல்லூர் பா உ .பாலா - 87280 லிமோஸ், பிரான்ஸ்

  • 6 years ago
* “எம் வாழ்கையின் தத்துவம் இது...நியதியும் இதுவே”...!

* “என் கால் சிறிதாகத் தடுமாறினாலும் பதறும் அப்பா...அம்மா இன்று நான் தடுமாறிய போது பதறாமல் இருக்கின்றார்கள் மீளாத் துயிலில்”...!!!

- ஆக்கம் : தமிழ் ஈழம் » யாழ் / நல்லூர் பா உ .பாலகிருஷ்ணன் - {பா உ .பாலா «» B.U.Bala}

87280 லிமோஸ், பிரான்ஸ்

* "வாழ்க்கை...! எத்தனையோ சொந்தங்கள்! எத்தனையோ உறவுகள்! இவற்றுக்கிடையில் பற்பல போராட்டங்கள்! இளமைமுதல் முதுமைவரை எவரெவர் நல்லவர்...கெட்டவர்? யாரை நம்புவது...யாரை நம்பாமலிருப்பது? எங்கும் போட்டி! எதிலும் பொறாமை! இப்படி எத்தனையோ...எத்தனையோ வினாக்களுக்கு விடை கிடையாமலே போகின்றது பல நேரங்களில் என் வாழ்க்கை"...!!!

* "நேயம்...மனித நேயம்...! மனிதர்களின் நாகரிக வளர்ச்சியினால் தனிமைப் படும் மனித நேயம்! உணர்வு இருந்தும் பணம் என்ற காகிதத்தால் சிக்கி உண்டு சீரழிகின்றது மனித நேயம்! உயிர்ப்புத் தரும் சில மனிதர்களையும் காயம் கொள்ள வைப்பதால் உறைந்து போகின்றது மனித நேயம்! போலிகள் நிறைந்து வருவதால் மனித நேய உணர்வும் போலியின் வெண்மையில் கரைந்து போகுமா...??? கரைந்து போகுமா"...!!!

* “தொல்லை நோக்கு...!!! 'நான் இன்று மவுனமாகிப்போகின்றேன் நான்...தவறானதால் அல்ல தவறான இடத்தில் நான் சரியாக நிற்பதால்'...! 'என்ன செய்ய நிலையான கொள்கைகளும் நேர்த்தியான செய்கைகளும் இல்லா இடத்தே தொலை நோக்குப்பார்வையை எப்படி நான் எதிர்பார்க்கலாம்'? 'என் உள்மனது உறுத்துகின்றது...பயிர்களுக்கு இடையிடை களைகள் முளைக்கும்'...! 'நானோ இங்கு களைகளுக்குள் பயிர்களை தேடுகின்றேன்'...! 'எல்லையில்லா உலகமிது விந்தைகளோ ஏராளம்...ஏராளம்'! 'வியப்புகளும் தாராளம்...தாராளம்'! 'எல்லாமே கண்டுணர என் காலம்தான் போதாதே...! இந்த நிலை நிதரிசனம்'...! 'என்ன இங்கு இருந்தபோதும்...! எப்படித்தான் நடந்தபோதும்'...! 'என் முட்டுச்சுவரில் முட்டிமோத வரிசைகட்டி நிற்கின்றார்கள்'..! 'கஞ்சாவை விதைத்துவிட்டு...துளசிச்செடி முளைக்குமென்று வியாக்கியான பேச்சுக்களும்'...! 'விசித்திரமான விஞ்ஞான விளக்கங்களும்'...! 'ம்ம்ம்ம்ம்...பொது நலத்தின் போர்வையிலே...சுய நலங்கள் வாழ்கின்றன'...! 'சுதாகரித்துக்கொண்டவர்களை கண்டு என் மனம் வெதும்பி இகழ்கின்றன'...! 'நீறுபூத்த என் நிகழ்காலமும்...நிச்சயமற்ற எதிர்காலமும்”...!!!

* “என்னால்...மறக்கமுடியாத சில நிகழ்வுகளுமுண்டு...! மறக்கவேகூடாத பல தருணங்களுமுண்டு...! ஒரு தருணத்திற்க்காய் தெரிந்தே நடக்கிறது சில நிகழ்வுகள்”...!!!

* "என் தோல்விகள் தற்காலிகமானது தான்...தோற்றவர்கள் தான் உலகையே மாற்றியுள்ளனர்"...!!!

* “தர்மம் வெல்லும்! தர்மம் ஒரு நாள் நிச்சயம் வெல்லும்”...!!!

- மீண்டும் சந்திப்போம் அது வரை அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் எனது இனிய தமிழ் வணக்கம்.

- நன்றிக்கு விடைகூறி விடைபெறுகின்றேன்...! நன்றி, வணக்கம்.

-பா உ .பாலகிருஷ்ணன்-

* “Web Site & Facebook - முகநூல்” :

- https://www.facebook.com/pages/ஈழச்சூரியன்-தமிழீழம்/

- http://www.facebook.com/eelachsooriyan.tamileelam

- https://www.facebook.com/B.Bala87280Fr

- https://www.facebook.com/balasingam.sathasivam

- https://www.facebook.com/uthayakumary.balasingam.7

- http://www.facebook.com/Sooriya.Uthayam

- https://www.youtube.com/c/balasingam87

- http://www.dailymotion.com/Eelam-Yaal-Nallur-B-Bala

- http://www.dailymotion.com/b-u-bala

- HTTP://TWITTER.COM/BALA87FR

- https://twitter.com/JaffnaBALA

- https://twitter.com/balasingam87

Recommended