Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/11/2018
சந்திரகிரகணம் ஜனவரி மாதம் 31ஆம் தேதி மாலை 6.22 மணி முதல் இரவு 8.41 மணி வரை நிகழவிருக்கிறது. இதனால் பழனி கோயிலில் தைபூச நாளில் நடைபெறும் தேரோட்டம் மாலையில் நடைபெறுவதற்கு பதிலாக பகலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
சந்திரகிரகணம் ஜனவரி மாதம் 31ஆம் தேதி மாலை 6.22 மணி முதல் இரவு 8.41 மணி வரை நிகழவிருக்கிறது. இதனால் பழனி கோயிலில் தைபூச நாளில் நடைபெறும் தேரோட்டம் மாலையில் நடைபெறுவதற்கு பதிலாக பகலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
பழனி கோயிலில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, மதியம் 2.45 முதல் 3.45 மணி வரை நடைபெறும். அதன் பிறகு கோயில் நடை அடைக்கப்படும். தைப்பூசத்தில் மாலை நேரத்தில் நடைபெறும் தேரோட்டம், சந்திரகிரகணத்தால் பகல் 11.00 மணிக்கு நடக்கவுள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல தைப்பூசத்தில் சந்திரகிரகணம் வந்ததாகவும் அதனால் பகலில் தைப்பூசத் தேரோட்டம் நடந்ததாகவும் கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.


After about 60 years, the annual car festival of Sri Dhandayuthapani Swamy Temple will take place in the forenoon instead of evening on January 31, 2018 in view of lunar eclipse. The Thai Poosam festival, which draws a large number of devotees from many parts of the world, including Singapore, Malaysia.

Category

🗞
News

Recommended