Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
அடையாள அட்டை வைத்திருந்தும் எங்களை அனுமதிக்க மறுத்தது கண்டிக்கக் தக்கது என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார். தமிழக சட்டசபை ஆளுநர் உரையோடு தொடங்கியது. அப்போது கறுப்பு சட்டையோடு வந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்க தமிழ்செல்வனை அவைக்குள் விட போலீசார் மறுக்கவே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ் செல்வன் தங்களைப் பார்த்தாலே ஆளுங்கட்சிக்குப் பயம் என்று கூறி கலாய்த்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு எம்எல்ஏ உள்ளே இருப்பதைப் பார்த்தே எல்லோரும் பயந்து கொண்டிருக்கின்றனர். இனி நாங்கள் எல்லோரும் போனால் அவ்வளவுதான்.
அதான் எங்களை உள்ளே விட மறுக்கின்றனர். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரட்டும். என்னுடைய முகத்தை இந்த தமிழகத்திற்கே அடையாளம் தெரியுமே?

Dinakaran supporter and disqualified MLA Thanga Tamilselvan arrived in the Assembly to see of his leader's maiden Assembly meeting.

Category

🗞
News

Recommended