Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/3/2018
நீண்ட நாளாக கட்சியிலிருந்தும், குடும்பத்திலிருந்து ஒதுங்கியிருந்த அழகிரி நீண்ட நாளைக்கு பின் கருணாநிதியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். கருணாநிதியின் குடும்பத்தில் அனைவரும் இலை மறைவு காயாக செயல்படும் நிலையில், அதிரடியாகவும் தடாலடியாகவும் செயல்படுபவர் கருணாநிதியின் இரண்டாவது மகன் அழகிரி. கடந்த பல வருடமாக கட்சியிலிருந்தும், குடும்பத்திலிருந்தும் ஒதுங்கி அரசியல் நிகழ்வுகளை கவனித்துவந்த அழகிரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக கருத்துகளை தெரிவித்து மீண்டும் செய்திகளில் இடம்பிடித்தார். கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற போட்டியில் காணாமல் போன அழகிரி தற்போது நீண்ட நாளுக்கு பின் தனது தந்தையை சந்தித்துள்ளார்.

அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின் மீது கொண்ட பற்றால் தனது இரண்டாவது மகனுக்கு அந்த பெயரை சூட்டினார் கருணாநிதி. பெயருக்கு ஏற்றார் போலவே சிறுவயதிலிருந்து செயல்பட்டு வந்த அழகிரி ஆரம்ப காலத்தில் கருணாநிதியின் செல்லப்பிள்ளையாகவும் இருந்து வந்துள்ளார். மூத்த பிள்ளையான மு.க.முத்து சினிமாவில் பிரபலமாக வேண்டும் என உழைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அரசியலில் அழகிரி உருவாகிக்கொண்டிருந்தார்.

கட்சியில் பதவி ஏதுமில்லை என்றாலும் மதுரை சுற்றுவட்டார தென் மாவட்டங்களில் திமுக தொடர்பான முடிவை அழகிரி எடுக்கும் அளவிற்கு முன்னேறினார்.கட்சியில் உள்ள தலைவர்களின் அதிருப்தி, ஸ்டாலினின் அதிருப்தி என பலமுனை தாக்குதலுக்கு ஆளானதால் சில காலம் அழகிரி கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். தொண்டர்கள் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் கட்சித் தலைமை அறிக்கை வெளியிட்டது. பின்னர் அழகிரிக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் என புதிய பதவியை உருவாக்கி கொடுத்தார் கருணாநிதி.


Alagiri meets DMK leader Karunanithi in Gopalapuram Home. This meeting is consider to be a major change maker in DMK party.

Category

🗞
News

Recommended