Skip to playerSkip to main content
  • 8 years ago
நாச்சியார் படத்துல 'தே... பயலுங்க' என்ற வார்த்தையைப் பேசியுள்ளார் நடிகை ஜோதிகா. இது தமிழ் சினிமாவுக்குப் புதிதில்லை என்றாலும், ஜோதிகா போன்ற ஒரு கதாநாயகி இப்படிப் பேசியிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக வெளியில் பல்வேறு கருத்துக்களைப் பரவ வைத்துள்ளது. ஒரு பெண்ணே இந்த மோசமான வார்த்தைகளை எப்படி உச்சரிக்கலாம் என்று பலரும் கோபக் கேள்வி எழுப்பியுள்ளனர். பாலா படங்களில் கெட்ட வார்த்தைப் பிரயோகம் சகஜம் என்றாலும், ஜோதிகா மாதிரி குடும்பப் பாங்கான பெண்ணின் வாயிலிருந்து இந்த வார்த்தையை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

"ஒரே ஒரு ஒற்றை கெட்ட வார்த்தையில் தெரிகிறது நாச்சியாரின் வீச்சு..! சோதிகாவே இந்த பேச்சு பேசுதே.. ஜிவி.பிரகாஷ் என்ன பேச்சு பேசுவானோ....!?!" என ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
"நல்லக் குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டவர் என்று சொல்லப்படும் ஜோதிகா இப்படியொரு வசனத்தைப் பேச எப்படி ஒத்துக்கொண்டார்? 36 வயதினிலே... மகளிர் மட்டும் என பெண்களின் முன்னேற்றத்திற்கான சினிமாவில் நடித்த ஜோதிகாவா இப்படி? பெண்களை வைத்தே பெண்களை கேவலப்படுத்துவது சில வக்கிர ஆண்களின் டெக்னிக்.

Bala's Naachiyaar teaser created various reactions among public due to a abusive word used by Jyothika
Comments

Recommended