3வது டி20 போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு ?- வீடியோ

  • 7 years ago
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கின்றது, இந்த நிலையில் கேரளத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக மலை பெய்து வருவதால் நாளைய போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் நியூசிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளைமறுதினம் (நவ.7-ந்தேதி) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.

தென்மேற்கு பருவமழைக் காலம் முடிவடைந்து விட்டதால் தற்போது கேரளாவில் மழை சீசன் இல்லை. என்றாலும் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யலாம் என வானிமை மையம் தெரிவித்துள்ளது. தற்போது மைதானம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால் போட்டி நடப்பது சந்தேகம்தான்.

The third T20 match between India and New Zealand will be held in Trivandrum tomorrow, as it is the three days in Kerala where the rain is likely to be interrupted by tomorrow's match.

Recommended