உணர்ச்சிவசப்பட்ட ரசிகர், ஓடி வந்தார் கோஹ்லியை நோக்கி...வீடியோ

  • 7 years ago
கான்பூர் மைதானத்தில் நடந்த இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் 338 ரன்கள் இலக்கை எடுக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது நியூசிலாந்து அணி. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் மிகவும் அதிரடியாக விளையாடினர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவும் , கோஹ்லியும் சிறப்பாக ஆடி செஞ்சுரி அடித்தனர். கோஹ்லி 147 ரன்களும், ரோஹித் சர்மா 147 ரன்களும் அடித்தனர். இந்த போட்டியில் கோஹ்லி செஞ்சுரி அடித்த போது அவரது ரசிகர் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு கோஹ்லியை நோக்கி வேகமாக ஓடி வந்தார். இந்த சம்பவம் மைதானத்தில் சில நிமிடங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஒருவாரமாக நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியாவிற்கு எதிராக விளையாடி வருகின்றது. மும்பையில் நடத்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியும், புனேயில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றது. தற்போது நேற்று கான்பூரில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றி இருக்கிறது.

An ardent fan of Kohli could not control his emotions and caused a serious security breach in Kanpur cricket ground yesterday. when he ran into the ground to hug Virat Kohli on his 32nd ODI century.

Recommended