திண்டுக்கல்: கொடைக்கானல் வனப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மரிய வில்சன், கருஞ்சிறுதையின் நடமாட்டத்தை கண்டறியும் கேமரா குறித்த விளக்கங்களை வன அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தனியார் நட்சத்திர தங்கும் விடுதியில் இரண்டு நாட்களாக தங்கி இருந்த நிதி அமைச்சர் மரிய வில்சன் நேற்று முன்தினம் அடர்ந்த வன பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ய தனது வாகனத்தில் அவரே ஓட்டி சென்றார். குறிப்பாக பூம்பாறை வனச்சரகம், வேம்படி சிகரத்தில் அமைக்கப்பட்டுள்ள வேட்டைத் தடுப்பு முகாமில், வனத்துறையினரின் 24 மணி நேரத் தொடர் பணிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வயர்லெஸ் ரிப்பீட்டர் (Wireless Repeater) மற்றும் சோலார் மின்கட்டமைப்பு வசதிகளை நிதி அமைச்சர் மரிய வில்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உயரமான மலைப்பகுதியில் இருந்து காட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் எளிதாக வயர்லெஸ் சிக்னல் கிடைப்பது குறித்தும், எதிர்பாராத காட்டுத்தீ (Forest Fire) அல்லது அவசர சூழல்களில் உடனடித் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளுடன் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், வன பகுஅதிகளில் விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் கேமராவில் கருஞ்சிறுதையின் நகர்வுகளை ஆய்வு செய்தார்.
Comments