தென்னிந்தியாவின் 'கானக்குயில்' என்று அன்போடு அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி (88) அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரில் காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த பாடகி எஸ். ஜானகி அவர்களின் இறுதிச்சடங்குகள் மைசூரு மாவட்டத்தில் உள்ள கனியனஹுண்டி தோட்டத்தில் (Kaniyanahundi Garden) நடைபெறும் என்று குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் அவரது மறைவுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Comments