மண்ணடியில் அமைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அங்கு ஐயூஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொய்தீனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பூக்களைத் தூவி மிகுந்த உற்சாகத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வின் போது உரையாற்றிய முதலமைச்சர், "இந்த விஜய் எப்பொழுதும் உங்களோடு நிற்பான்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், தன்னைச் சிறுபான்மையினரின் உண்மையான காவலன் என்று பிரகடனப்படுத்திய அவர், அவர்களின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் தனது அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்தார்.
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Comments