Skip to playerSkip to main content
  • 1 hour ago
அரியலூர்: உடையார்பாளையம் ஸ்ரீ நறுமலர் பூங்குழல் நாயகி உடனுறை ஸ்ரீ பயறணீஸ்வரர் சுவாமி கோயிலில் 80 ஆண்டுகள் பிறகு தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஸ்ரீ நறுமலர் பூங்குழல் நாயகி உடனுறை ஸ்ரீ பயறணீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைத்துள்ளது. இத்திருகோயில் 1400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கே உள்ள திரு பயறணீசுவரர் ஆலயம் தமிழகத்தின் தொன்மையான கோயில்களில் ஒன்று. சாமியின் திருநாமம் பயறணீநாதர் எனவும் மற்றும் அம்பிகையின் திருநாமம் தமிழில் நறுமலர்ப் பூங்குழல்நாயகி என்று அழைக்கப்படுகிறது.மேலும், இங்குள்ள வில் வளைத்த பிள்ளையார் அருச்சுனனுக்கு காண்டீப வில்லை வளைத்த கொடுத்தவர் என்றும் ஐதீகம். இவர் திருக்கரத்தில் ஒரு வில் உள்ளது. தற்போது இந்த வில் வளைத்த விநாயகர் உபகோயிலில் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி மற்றும் மகா தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 80 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் வில் வளைத்த விநாயகர் காண்டீபத் தீர்த்தத்தில் தெப்ப தேரில் அமர்ந்து மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் உடையார்பாளையம் மற்றும் சுற்றுவட்ட கிராமங்களை சார்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Category

🗞
News
Transcript
00:23Thank you very much.
Comments