2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 6 மணி முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வரும் நிலையில், ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருப்பத்தூரைச் சேர்ந்த ஒரு ஜோடிக்கு இன்று காலை திருமணம் நடைபெற்ற நிலையில், இல்லற வாழ்வைத் தொடங்குவதற்கு முன்பாக நாட்டின் கடமையை நிறைவேற்ற அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, மணமகன் பட்டு வேட்டி-சட்டையிலும், மணமகள் பட்டுப் புடவை மற்றும் ஆபரணங்கள் அணிந்த திருமணக் கோலத்திலேயே நேராக வாக்குச்சாவடிக்கு வருகை தந்தனர். வாக்குச்சாவடி அதிகாரிகள் முன்னிலையில் தங்களது ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையைச் சமர்ப்பித்த அவர்கள், முறைப்படி வரிசையில் நின்று வாக்களித்தனர். "திருமணம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதும் மிக முக்கியம்" என்று அந்தத் தம்பதியினர் தெரிவித்தனர். மணக்கோலத்தில் வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றிய இந்தத் தம்பதியை அங்கிருந்த பொதுமக்களும் அதிகாரிகளும் வெகுவாகப் பாராட்டினர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், இளைஞர்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது.
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Comments