Skip to playerSkip to main content
தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ள கருத்துக்கள் தற்போது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ்பெற்ற வாசகமான "தீ பரவட்டும்" என்பதை மேற்கோள் காட்டி, நீதிக்கான குரல் டெல்லி வரை எதிரொலித்து நாம் வெற்றி பெற்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, சிறந்த வளர்ச்சிப் பாதையில் செல்லும் தமிழ்நாடு போன்ற தென்மாநிலங்களுக்கு, தொகுதி மறுவரையறை மூலம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது என்பது இழைக்கப்படும் அநீதி எனவும் ஆனால் அதனை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் வெறும் கண்டனத்தோடு நிற்காமல், டெல்லி அதிகார மையங்கள் அதிரும் வகையில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ள முதலமைச்சர், மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தென்மாநிலங்களின் அரசியல் குரலை நசுக்க நினைக்கும் முயற்சிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள இந்தப் போர், இப்போது டெல்லி வரை பரவி ஒரு அரசியல் நெருப்பாக மாறியுள்ளது. ஒட்டுமொத்தத் தமிழகத்தின் உணர்வைப் பிரதிபலித்த முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டாட்சி தத்துவத்தைப் பாதுகாக்க மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைக்கும் 'சம்பவத்தை' செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

#cmstalinnews #cmstalinspeech #delimitationcommission #delimitation2026 #delhi #pmmodinews #dmkvsbjp #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Category

🗞
News
Comments

Recommended