மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலைத் தீயிட்டு எரித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு நிறுவப்பட்டிருந்த 20 அடி உயர கொடிக்கம்பத்தில் கருப்புக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிரான தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் அமையவுள்ள இந்தத் தொகுதி மறுவரையறைக்கு எதிராக, முதலமைச்சரே நேரடியாகக் களமிறங்கி மசோதா நகலை எரித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Comments