ஊழ்வினையை முறித்திடவே ஓடிவரும் உன் கை வேல்! ஒரு கோடி துயர்வரினும் தடுத்து நிற்கும் நீல மயில்! வாழ்வதற்கு துணை உந்தன் திருநாமம்!
வற்றாத பொய்கை எது கதிர்காமம்!
என்றும் வற்றாத பொய்கை எது கதிர்காமம்!
ஆறுபடை வீடுகளில் அமர்ந்திருக்கும் அழகேசா! அன்பர் மனக் கோயிலிலே வந்திருக்கும் குமரேசா!
நீ இருக்க எனக்கென்ன குறையைய்யா! திருநீறுருக்க பயமில்லை முருகைய்யா! ஏழு கடல் தாண்டி ஒரு இசைக்கடலில் என் பயணம்! காலமெல்லாம் தொடரவைத்தாய் வேலவனே! தாய், தந்தை, குரு தெய்வம் யாவருமே நீ தானே! தாழ் மலர்கள் தலை வைத்தேன் தூயவனே! உன் தாழ் மலர்கள் தலை வைத்தேன் தூயவனே!
Comments