மூளை இல்லாதவர்களே... முதலில் சட்டவிதிகளைப் படியுங்கள்! - கலாஷேத்ரா விவகாரத்தில் காட்டமான குஷ்பு

  • last year
கலாஷேத்ரா விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் தலையிடாதது ஏன் எனப் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக குஷ்புவிடம் ட்விட்டர் மூலமாகக் கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். இதனால் கடுப்பான அவர், ’’முதலில் தேசிய மகளிர் ஆணையத்தின் சட்ட விதிகளைப் படியுங்கள், மூளை இல்லாதவர்களுக்கு அது உதவும். இந்த விவகாரத்தில் முதலில் தெளிவு கிடைக்க வேண்டும். சரியான நேரத்தில் என் குரலை நான் உயர்த்துவேன்.

உங்களுக்குப் பதிலளிப்பதை விட மிகப்பெரிய பொறுப்பு எனக்கு உள்ளது. யாருடைய முதுகு பின்னாடி ஒளிந்து கொண்டு என்னைக் கேள்வி கேட்கும் கோழைகளாக இருக்காதீர்கள். உங்கள் அடையாளத்துடன் கேளுங்கள் பதில் சொல்கிறேன்.

மேலும் ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய எந்த ஆணுக்கும் உரிமை இல்லை. நானும் ஒரு பெண் தான். கட்சி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் எல்லாம் அடுத்தது தான். சிலர் தங்களுக்குத் தெரிந்த மொழியைப் புரிந்து கொண்டால், அதே வரியில் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். நான் ஒரு மனைவி, ஒரு சகோதரி, ஒரு மகள், ஒரு மருமகள் மற்றும் ஒரு தாய். உங்கள் எல்லைகளை என்னிடம் கடக்க முயற்சி செய்ய வேண்டாம் ’’ எனக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.


Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/

Category

🗞
News

Recommended