காதல் கதைகள் நம் சினிமாவில் ஏராளமாகவும் தாராளமாகவும் வந்திருக்கின்றன. அதிலும் காதலிப்பதாகச் சொல்லிவிட்டு, கழற்றிவிடுகிற கதைகளும் நமக்குப் புதிதில்லை. அப்படி கைவிடப்பட்ட பெண்ணுக்கு தம்பி இருப்பான். பழி வாங்குவான். ‘பெரிய இடத்துப் பெண்’ணாகிவிடும். அண்ணன் இருப்பான். ‘சகலகலா வல்லவன்’ என்றாகிவிடும். அண்ணனும் இல்லாமல், தம்பியும் இல்லாமல், மகன் வளர்ந்து பழிவாங்கினால், அது ‘நீங்கள் கேட்டவை’யாகவோ ‘மிஸ்டர் பாரத்’தாகவோ இருக்கும்.
இப்படித்தான் ஒவ்வொருவிதமாக படங்கள் வந்து, காதல் கதைகளாகவும் காதலால் ஏமாந்த கதைகளாகவும் அந்த துரோகத்துக்குப் பழிவாங்குவதாகவும் அமைந்து சக்கைப்போடு போட்டன. இவற்றில் இருந்து வேறுபட்டதும் மாறுபட்டதுமான படைப்பாக வந்ததுதான் ‘விதி’ திரைப்படம்!
1984-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி, ‘விதி’ வெளியானது. பல தியேட்டர்களில், வெள்ளிவிழாவாக 175 நாட்களைக் கடந்து ஓடி, வசூல் சாதனையும் புரிந்தது. மோகனின் வெள்ளிவிழாப் படங்களில், ‘விதி’யும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது. படம் வெளியாகி, 39-ம் ஆண்டில் இருந்தாலும், ஆரூர்தாஸின் வசனங்கள், ’விதி’யை நம் தமிழ் சினிமா வரலாற்றில், மிக மிக அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறன.
கட்டுரையாளர் : வி.ராம்ஜி
Website: https://kamadenu.hindutamil.in
Facebook.com/KamadenuTamil
Twitter.com/KamadenuTamil
Sharechat.com/KamadenuTamil
Instagram.com/kamadenuTamill
Comments