Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/30/2023
‘என்ன சாப்பிட்டாலும் எதுக்களிக்கிறது, நெஞ்செரிச்சல் தொந்தரவு படுத்தி எடுக்கிறது. இதனால் தொண்டை ரணமாகிறது, தூக்கம் தொலைகிறது’ என்ற புலம்பல் தற்போது அதிகமாகி வருகிறது. குறிப்பாக கரோனாவின் கொடைகளில் ஒன்றாகவும் இந்த பிரச்சினை அதிகம் பேரை பாதித்திருக்கிறது. பொதுவான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை தவறுகளாலும் எதுக்களிப்பு அல்லது நெஞ்செரிச்சலால் அவதிப்படுவோர் நம்மில் அதிகம். யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் இந்த உபாதையை போக்குவது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

இயற்கை தீர்வுகள்

இயற்கை மருத்துவ முறையின் அடிப்படையில், ஈரப்படுத்திய துண்டு ஒன்றினை நான்காக மடித்து காலையில் வெறும் வயிற்றின் மேல் 20 - 30 நிமிடங்கள் போட்டு வரலாம். மருத்துவ பரிந்துரையின் கீழ் இடுப்புக்குளியல் எடுத்துக்கொள்ளலாம். மன அமைதிக்கு இசை கேட்பது முதல் தியானம் பழகுவது வரை ஈடுபடலாம். ஆசனங்களில் வஜ்ராசனம் பயில்வது, ஜீரண சக்தியை தூண்டி நெஞ்செரிச்சலை குறைக்க உதவும்.

(மருத்துவர் யோ.தீபா - கைநுட்பத்துறை தலைவர், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை, சென்னை)

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

Website: https://kamadenu.hindutamil.in
Facebook.com/KamadenuTamil
Twitter.com/KamadenuTamil
Sharechat.com/KamadenuTamil
Instagram.com/kamadenuTamill

Category

🗞
News

Recommended