"திருடன்... திருடன்..." நகை கொள்ளையர்களை விரட்டி பிடித்த மக்கள்!

  • 2 years ago
வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த ஒடுகத்தூர் பஜார் தெருவை சேர்ந்தவர் விஷ்வா (27). இவர் அதே பகுதியில் வாடகைக்கு கடை எடுத்து தங்க நகை விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் அரிமலை கிராமத்தைச் சேர்ந்த மரகதம் (25), எனும் பெண் ஊழியர் ஒருவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இன்று 2 பேர் வாடிக்கையாளர்கள் போல் கடைக்கு வந்து மரகதத்திடம் பேச்சு கொடுத்து விலை உயர்ந்த நகைகளை காண்பிக்கும் படி கூறியுள்ளனர். இதனை, நம்பிய கடை ஊழியர் மரகதம் நகைகளை ஒவ்வொன்றாக காண்பித்துள்ளார். இதையடுத்து, கடையில் யாரும் இல்லாததை அறிந்த அந்த நபர்கள் ஊழியர் அசந்த நேரத்தில் கடையில் இருந்த 4 சவரன் தங்க செயினை பிடிங்கிக் கொண்டு தப்பியோடுயுள்ளனர். இதனை, சற்றும் எதிர்பாராத மரகதம் "திருடன்... திருடன்..." என கத்தி கூச்சலிட்டுள்ளார். பின்னர், ஊழியரின் சத்தம் கேட்ட அப்பகுதி பொதுமக்கள் 2 பேரை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு துரத்தி சென்று ஒருவரை மட்டும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். நகையுடன் இருந்த மற்றொருவர் தப்பியோடிவிட்டனர். இதனையடுத்து, தகவலறிந்த வந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் இருந்து வாலிபரை மீட்டனர். அவரிடம் விசாரணை நடத்தினர்.

Recommended