வா.. நீயும்... நானும் சோடி போட்டு பார்ப்போமா... வெட்டுக்கிளியுடன் விளையாடும் குழந்தை!

  • 2 years ago
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் இன்று காலை சிறுவர், சிறுமிகள் விளையாடி கொண்டு இருந்தனர்.அந்த நேரத்தில் எதிர்பாரத விதமாக பறந்து வந்த ஒரு வகையானபச்சை நிறத்தில் அரிய வகை பூச்சி ஒன்று இரு சக்கர வாகனத்தில் மேல் வெகு நேரமாக நின்று கொண்டு இருந்தது. விளையாடி கொண்டு இருந்த சிறுமி அந்த பூச்சியின் பக்கம் நின்று கொண்டு பார்த்து பொழுது அரிய வகை பூச்சி சுட்டி தனமாக விளையாட தொடங்கியது. இதனை சிறுமியின் தந்தை தனது மொபைலில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி உள்ளார்.

Category

🗞
News

Recommended