தண்டவாளத்தில் தலை வைத்து ஓய்வெடுத்த இளைஞர்கள்; வைரல் வீடியோ

  • 2 years ago
இராசிபுரம் சேலம் சாலையில் ரயில்வே பாலம் கீழே உள்ள  முத்துகாளிப்பட்டி மதுபான கடையில் மது பாட்டில்களை வாங்கும் மதுப்பிரியர்கள், அதனை அ‌ருகில் உள்ள ரயில்வே‌பகுதிக்கு எடுத்துச் சென்று, பாலத்தின் கீழே மற்றும் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திவிட்டு தலைக்கேறிய போதையில் தண்டவாளத்தில் தலை வைத்து அங்கேயே படுத்தும் விடுகின்றனர்... குறிப்பாக அதிகமான இளைஞர்களே மதுபோதையில் தண்டவாளங்களில் படுத்து கிடைக்கின்றனர்.  தனியார் பள்ளி, நீதிமன்ற வளாகம், தங்கும் விடுதிகள், உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உள்ள இந்த இடத்தில் நடக்கும் சமூக விரோத செயல்களில் இதுவும் ஒன்று