14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்! முதல்வருக்கு நெருக்கமானவர்கள் வலியுறுத்தல்

  • 4 years ago
முதல்வரின் மருத்துவக்குழுவுடன் தொடர்புடைய சிலரிடம் பேசினோம். “முதல்வரின் உடல்நிலை தினமும் பரிசோதிக்கப்படுகிறது. வாரம் ஒரு முறை அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்கிறார்கள். கடைசியாக அவருக்குச் செய்யப்பட்ட பரிசோதனையிலும் நெகட்டிவ் ரிசல்ட்டே வந்துள்ளது. ஆனாலும், கொரோனா தொற்றுள்ளவர்களை முதல்வர் சந்தித்துள்ளதால், 14 நாள்கள் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதைத்தான் முதல்வருக்கு நெருக்கமான மருத்துவர்கள், சுகாதாரத்துறை உயரதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அனைவருமே வலியுறுத்திவருகிறார்கள். அதற்கு அவர், ‘மக்களுக்காக உழைக்கிறேன். கடவுள் பார்த்துக் கொள்வார்’ என்றே சொல்லிவருகிறார். நாங்கள் அவருக்காகக் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறோம்” என்றார்கள் உருக்கமாக!

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Recommended