சி.பி.சி.ஐ.டி-க்கு வந்த சீக்ரெட் கடிதம் - நிர்மலா தேவியின் வலதுகரத்துக்கு `ஸ்கெட்ச்' !

  • 4 years ago
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வழக்கில், போலீஸாரின் சந்தேகப்பார்வை பலர்மீது விழுந்திருந்தாலும், மதுரை காமராஜர் பல்கலைக் கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் உதவிப் பேராசிரியர் முருகனை போலீஸார் தேடிவந்தனர். சில தினங்களுக்கு முன்பு, பல்கலைக்கழகத்தில் வைத்து முருகன் கைதுசெய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த கருப்பசாமி, இன்று மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

cbcid received an secret letter in nirmaladevi issue

Recommended