3 மாத குழப்பத்திற்கு தீர்வு ! அ.தி.மு.கவில் 2 நாட்களுக்குள் அதிரடி !

  • 4 years ago
மத்திய அரசு, ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்களுக்கு எச்சரிக்கையும் செய்துள்ளது. அதில் “அ.தி.மு.க என்ற கட்சியும், ஆட்சியும் இருக்க வேண்டும் என்றால் தினகரனை கழற்றிவிடுங்கள். ஓ.பி.எஸ் அணியுடன் இணைந்து செயல்படுங்கள். அப்போது தான் கட்சியும் காப்பாற்றப்படும், ஆட்சியும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும்” என்று ஓபனாகவே சொல்லபட்டது. இந்தத் தகவல் தினகரன் காதுக்கும் எட்டியுள்ளது. விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த போதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர் தினகரன் வீட்டுக்குச் சென்று “நீங்கள் இருப்பது தான் பிரச்னையாகின்றது. முதலில் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றுங்கள். நீங்கள் தற்காலிகமாகவது ஒதுங்கியிருங்கள். உங்களை பொறுப்பில் வைத்திருப்பதால் தான் மத்திய அரசு கட்சியையும் ஆட்சியையும் காலி செய்யப்பார்க்கின்றது” என ஓபனாக எகிறி உள்ளார். அப்போது தினகரன் டென்ஷனாகி, “நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எனக்கு புத்தி சொல்ல வேண்டாம்” என்று சொன்னதும், கடுப்பில் வெளியே வந்துள்ளார் அந்த அமைச்சர்.

Recommended