கைதிகள் விடுவிப்பு ஜெ கனவு ! - சத்யராஜ்

  • 4 years ago
கைதிகள் முன்விடுதலை தொடர்பாக நம்மிடம் பேசிய நடிகர் சத்யராஜ், "எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்துகொண்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு சிறைக் கைதிகளை முன்விடுதலை செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் தீவிரப்படுத்த வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக, சட்டமன்றத்திலேயே முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்தார். சட்டத்தில் அதற்கு வழிவகை இருப்பதாக சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். தற்போதுள்ள தமிழக அரசு இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, ஜெயலலிதா கனவை நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு முறையும் இவர்களது விடுதலையைப் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் வேறு வேறு பிரச்னைகள் உருவாகி, தள்ளிப் போய்க் கொண்டே இருக்கின்றது.

Recommended