மௌனமாக இருந்து அணியை ஒன்று சேர்க்கும் ராஜதந்திரி முதல்வர் !

  • 4 years ago
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, நேற்று தலைமைச் செயலகத்துக்கு இரண்டு முறை வருகை தந்தபோதே, அரசியல் மேகங்கள் மாறத் தொடங்கிவிட்டதை அ.தி.மு.க தொண்டர்கள் உணர்ந்து கொண்டனர். 'தொகுதிப் பிரச்னை தொடர்பாகத்தான் முதல்வரை சந்தித்தேன்' என நழுவியவர், 'அணிகள் இணைவது குறித்த பன்னீர்செல்வத்தின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்' என நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்குத் தொடக்கப் புள்ளி கொடுத்துவிட்டுச் சென்றார். இதையடுத்து, முதல்வர் பழனிசாமியும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் சண்முகம் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. இதன்பின்பு விமான நிலையத்தில் பேசிய தம்பிதுரை, 'ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் வருந்திய நிலையிலும், மக்களை சந்தித்து இந்த ஆட்சியை மலர வைத்தார். அதைத் தக்கவைப்பது மிகவும் முக்கியம்' என்றார். பன்னீர்செல்வமும், 'யார் வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்' என்றார்.

Recommended