உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 40வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் வங்கதேசமும் மோதின.
டாஸ் வென்று, முதலில் இந்திய அணி பேட் செய்தது. துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் இருவரும் வங்கதேச பவுலர்களின் பந்துவீச்சை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் அடித்து விரட்டினர். முதல் விக்கெட்டுக்கு 180 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். ரோகித் 104 ரன்னிலும், ராகுல் 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு வந்த வீரர்கள் வந்த வேகத்தில் திரும்பினர். ரிஷப் பந்த், தோனி விதிவிலக்கு. முறையே 48, 35 ரன் சேர்த்தனர். இந்திய அணி 50 ஓவரில் 9விக்கெட் இழப்புக்கு 314 ரன் எடுத்தது.
Be the first to comment