Skip to playerSkip to main content
  • 6 years ago
அப்பார்ட்மென்ட் கட்ட 5 வருடம் தடை.. காரணம் தண்ணீர் பஞ்சம்..!


தண்ணீர் பஞ்சம் சென்னையில் மட்டும் இல்லை தமிழ்நாடு, கர்நாடக ஏன் மொத்த இந்தியாவிலும் உள்ளது. இத்தகையை மோசமான நிலைக்கு மக்களாகிய நாமும் ஒரு காரணம் என்பதை இப்போது அனைவரும் உணர்ந்துள்ளோம்.

இதன் ஒரு படி மேலாகக் கர்நாடக அரசு தலைநகரான பெங்களூரில் அடுத்த 5 வருடத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை தீரும் வரையில் அப்பார்ட்மென்ட் கட்ட அனுமதி வழங்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகக் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் G Parameshwara தெரிவித்துள்ளார்.
மேலும் பெங்களூரில் இருக்கும் பல அப்பார்ட்மென்ட்களுக்குத் தண்ணீர் பிரச்சனையை எப்படித் தீர்க்கப் போகிறது என்பதை உறுதி செய்யாமலேயே வீடுகளை விற்பனை செய்து வருகிறது.

இதில் பாதிக்கப்படுவது என்னவோ மக்கள் தான்.

இதைக் கருத்தில் கொண்டு தான் 5 வருட தடை குறித்து ஆலோசனை செய்து வருகிறது கர்நாடக அரசு. தமிழக அரசு செய்துகொண்டு இருக்கிறது..?

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended