கடலூரில் இருந்து 12 புதிய வழித்தடங்களில் பேருந்து

  • 5 years ago
கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் பல்வேறு வழித்தடங்களில் செல்லக் கூடிய 12 புதிய பேருந்துகளை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் பொதுமக்கள் நலன் கருதி கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் இன்று கடலூர் மத்திய பஸ் நிலையத்திலிருந்து 12 புதிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இப்பேருந்துகள் கடலூரில் இருந்து சேலம் உளுந்தூர்பேட்டை வழியாக செல்லக்கூடிய வழித்தடம். கடலூர் -சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் வழித்தடம், சிதம்பரம் -சேலம் வழியாக செல்லக்கூடிய பேருந்து என மொத்தம் 12 புதிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

Mrs. Sampath, Minister of Labor, has launched 12 new buses to reach the Cuddalore central bus stand.

Recommended