10, 11 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுதேர்வில், மாநில அளவில் முதலிடம் பெறுகின்ற மாணவ-மாணவியர்களுக்கும், மாவட்ட அளவில் முதலிடம் பெறுகின்ற மாணவ-மாணவியர்களுக்கும் புரட்சித்தலைவி அம்மா பதக்கம் வழங்கப்படும் என தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்,; தலைமையில் நடைபெற்ற இரு அரசு விழாக்களில் 21,395 பயனாளிகளுக்கு.15.02 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அவர் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுதேர்வில், மாநில அளவில் முதலிடம் பெறுகின்ற மாணவ-மாணவியர்களுக்கும், மாவட்ட அளவில் முதலிடம் பெறுகின்ற மாணவ-மாணவியர்களுக்கும் புரட்சித்தலைவி அம்மா பதக்கம் எனது சொந்த நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனையடுத்து, மேலும், பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆணுக்கு சமமாக பங்காற்றிட தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் ஊக்கமும், ஆக்கமும் அளித்து வருகிறது. அதனடிப்படையில், உழைக்கும் மகளிரின் வேலைச்சுமையினை குறைக்கும் வகையிலும், பயணத்தின் போது மகளிருக்கு ஏற்படும் இன்னல்களை தவிர்க்கும் வகையிலும் உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற தமிழக அரசின் திட்டங்களை கொண்டு பொதுமக்கள் தங்களது வாழ்வில் வளம் பெற வேண்டும் என்றும், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
Des: Tamilnadu Deputy Chief Minister O.Panniriselvam said that the 10th, 11th and 12th class government will be awarded to the students who will get first place in the state level and the top prize-winning student students.