டெங்கு காய்ச்சல் பலியாகும் குழந்தைகள்-வீடியோ

  • 6 years ago
சென்னை மாதவரம் புழல் அடுத்த லட்சுமிபுரம் 32ஆவது வார்டுக்குட்பட்ட ராஜாஜி தெருவில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் உயிர் இழந்தார்..

மாதவரம் தணிகாசலம் நகரில் கடந்த மாதம் டெங்கு காய்ச்சலால் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் தற்போது மாதவரம் ராஜாஜி தெருவில் வசிக்கும் தியாகராஜன் என்பவரது மகன் மூன்றாவது படிக்கும் பள்ளி மாணவன் சரவணன் வயது 7 கடந்த திங்கட்கிழமை அன்று காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்இதனை அறிந்த பெற்றோர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர் மேலும் காய்ச்சல் தீவிரமடைய உடனே சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை சிகிச்சை மேற்கொண்டனர்.அங்கு ரத்தத்த அணுக்கள் மிகவும் குறைந்து காணப்பட்டதால் சிகிச்சையை மேற்கொள்ள முடியவில்லை மருத்துவமனையில் சிறுவன் உயிரிழந்தான்.சில நாட்களாக இப்பகுதியில் சுகாதாரம் இல்லாமல் மழைநீர் சூழ்ந்துள்ளதால் சுகாதாரமற்று காட்சியளிக்கும் இந்த பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் சரிவர சீரமைப்பு பணியை மேற்கொள்ளவில்லை என அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டினர் டெங்கு காய்ச்சலால் சிறுவன் உயிர் இழந்தாதால் அப்பகுதி பொதுமக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்

Des: The boy lost his life in dengue fever at Rajaji Street in Lakshmipuram

Recommended