ராஜஸ்தானில் சிறுத்தை ஒன்றை நாய் ஒன்று குரைத்தே ஓட விட்ட வீடியோ வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலானாவில் உள்ள புலிகள் காப்பகத்தில் திறந்த ஜீப்பில் இருந்த படியே சுற்றுலா பயணிகள் சிறுத்தையை பார்ப்பதற்கு காத்திருந்தனர். அவர்களின் காவலுக்கு நாய் ஒன்று ஜீப்புக்கு முன்பாக படுத்திருந்தது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் நாயை வேட்டையாட சிறுத்தை பாய்ந்து வந்தது. இதைக்கண்டு அஞ்சாத நாய் தைரியமாக எதிர் கொண்ட நிலையில், சிறிது நேரம் காத்திருந்த சிறுத்தை பின்னர் பின்வாங்கியது.
Comments