கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ராகுல் காந்தி நாளை பார்வை

  • 6 years ago
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையின் கோர தாண்டவத்தால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கியது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 372 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில், கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை பார்வையிடவுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள செங்கண்ணூர், ஆலப்புழா, அங்கமாலி பகுதிகளை ராகுல் காந்தி நாளை பார்வையிடவுள்ளதாகவும், நாளை மறுநாள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தை பார்வையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended