ஆலங்காயம் அருகே நள்ளிரவில் மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்த வருவாய் துறையினரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்த இரு சக்கர வாகனம் மீது லாரி ஏற்றி தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது வேலூர் மாவட்டம் ,ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பாலாற்றில் இருந்து நள்ளிரவில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி கொண்டு டிப்பர் லாரி ஆலங்காயம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது வெள்ளக்குட்டை கிராமம் பேருந்து நிலையத்தில் டிப்பர் லாரி டயர் பஞ்சராகி நின்றது. அதை கண்ட பொது மக்கள் லாரியை பிடித்துவைத்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வருவாய்த்துறை உதவியாளர் வெங்கடேசன் என்பவரை கீழேத்தள்ளியும் லாரியில் இருந்த மணலை அங்கேயே கொட்டி விட்டு முன்னாள் நின்றுகொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது லாரியை ஏற்றி தப்பித்து சென்றுவிட்டனர்.சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்துறையினரும் போலீசாரும் அந்த லாரியை துரத்தி பிடிக்க முயன்றும் லாரியை அதன் ஓட்டுனர் மின்னல் வேகத்தில லாரியுடன் தப்பித்து சென்றுவிட்டார்.
Des: A truck carrying a tipper lorry on a two-wheeler near the Alankyam, pulled down the revenue lorry and threw the truck on a two-wheeler