தாய்லாந்தின் மாயி சாய் நகரின், கால் பந்தாட்ட அணியைச் சேர்ந்த 11 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் கடந்த மாதம் 23ம் தேதி தாம் லுயாங் குகைக்கு சென்றனர். குகைக்குள் சென்றதும் பலத்த மழை பெய்ததால், குகையை மழை நீர் சூழ்ந்து வெளியே வர முடியாமல் குகைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் நடவடிக்கை உலகிற்கே விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக உள்ளது. குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் குகைப்பாதை வழியாக அழைத்து வருவது மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்றும், எனவே, அவர்கள் இருக்கும் இடத்தை அடைவதற்கான மாற்றுப் பாதைகளை உருவாக்கும் வகையில், மலைகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் துளைகள் இடப்பட்டுள்ளது. இதனையடுத்து, குகையில் இருந்து 6 சிறுவர்கள் முதற்கட்டமாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். குகையில் சிக்கியுள்ள எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv Facebook: https://www.fb.com/SathiyamNEWS Twitter: https://twitter.com/SathiyamNEWS Website: http://www.sathiyam.tv Google+: http://google.com/+SathiyamTV