சரியாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு - உத்தர பிரதேச அரசு அதிரடி

  • 6 years ago
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. அக்கட்சி சார்பில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவர் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அரசு ஊழியர்கள் சரியாக பணியாற்றவில்லை என்று அனைத்து தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். இதனை தடுக்க யோகிஆதித்யநாத் அரசு பல்வேறு அடுத்த அடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் அரசு அலுவலகங்களுக்கு, கூடுதல் தலைமை செயலாளரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. அதில். 50 வயதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை உயர் அதிகாரிகள் கண்காணிக்கும்படி கூறப்பட்டுள்ளது. மேலும் முறையாக பணி செய்யாத 50 வயதுக்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும்படி நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended