Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் 8 வழி பசுமை சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். நிலத்தின் உரிமையாளர்களுக்கே தெரியாமல், அவர்களின் விளை நிலங்களை போலீஸ் பாதுகாப்புடன் அளந்து அதிகாரிகள் கல் நட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதனை தொடர்ந்து மண்மலை பகுதியில் விவசாயிகள் தனது கரும்பு தோட்டத்தில் நின்று கொண்டு உடல் முழுவதும் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Category

🗞
News

Recommended