காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் உள்ளது. இங்கு துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு வெடித்தல் போன்ற பயிற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு வெடிக்கப்படும் வெடிப்பொருட்களில் ஒன்று குறி தவறி அருகில் உள்ள விவசாய நிலத்திற்குள் விழுந்தது. அது விழுந்த வேகத்திலேயே பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராணுவத்தினர் விவசாய நிலத்தில் இருந்த வெடிகுண்டை எடுத்து சென்றனர். இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது என்றும் இதனால் வீடுகளில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv Facebook: https://www.fb.com/SathiyamNEWS Twitter: https://twitter.com/SathiyamNEWS Website: http://www.sathiyam.tv Google+: http://google.com/+SathiyamTV